பேஸ்புக் காதல்.. 25 வயது இளைஞனுடன் 40 வயது பெண் ஓட்டம் : கதறும் கணவர் மற்றும் மகன்கள்!!

1419

தஞ்சையில்..

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அய்யப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனையடுத்து, கணவர் வெளிநாட்டிலும், மகன்கள் வேலை, படிப்பு என இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வாலிபருடன் ஏற்பட்டது. மேலும் தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார்.

பின் இருவரும் புகைப்படங்களை அனுப்பி பேசி கொள்ள நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலூரில் இருந்து ஒரத்த நாட்டிற்கு வந்த வாலிபர், அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.

ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். தொடர்ந்து இவர்கள் சுற்றி வந்த நிலையில் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார்.

கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார். இதன் பின் மகன்களுக்கு தெரியாமல் கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

மகன்கள் தந்தைக்கு தகவல் கொடுக்கற அவரை கண்டித்தே ஆகவேண்டும் என்ற வகையில், ஒரத்தநாடு போலீசில் புகாரும் கொடுத்தனர். இதனால், வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.

பின் கள்ளக்காதலனுடன் திருமணம் செய்த அவர், கணவருக்கு புகைப்படங்களையும் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளார். அதில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

அவருடன் குடும்பம் நடத்தப் போகிறேன், நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன கணவர் மகன்களிடம் அப்படி ஒரு தாய் இல்லை எனவும், திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம எனவும் ஆறுதல் கூறியுள்ளார்.