நாளைமுதல் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!!

580

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23.09) முதல் ஞாயிறு (25.09) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய லக்சபான நிலையம் சேவையில் இன்மை ஆகிய காரணங்களால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.