தனியாக இருந்த அக்கா… கல்லூரி முடிந்து வீட்டுக்கு தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

543

ஈரோடில்..

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த மாணவி லாவண்யா, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஈரோடு, ஆலாம்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில், மிக நன்றாக படிக்க கூடிய மாணவி லாவண்யா என்கிறார்கள்.

சமீப காலங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள் தற்கொலைச் செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உடனடியாக இப்படியான தற்கொலைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் பெயரளவுக்கு இல்லாமல் நிஜமாகவே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி.

இவருடைய கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மதியரசு கோபியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

லாவண்யா பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் தாமதமாக சேர்ந்துள்ளார். செல்வி அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் முதலாம் ஆண்டு தேர்வு தொடங்கியதால் லாவண்யா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே லாவண்யா கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் வழக்கம் போல் செல்வி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.

மதியரசு கல்லூரிக்கு சென்றிருந்தார். தனியாக இருந்த லாவண்யா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மதியரசு தங்கை லாவண்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார்.

இது குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.