வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்காவன திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இயற்கை வளங்களை கொண்டு தாயரிக்கப்பட்ட அழகிய பூஞ் சோலையில் விநாயகர் எழுந்தருளிய விநாயகருக்கு திருஊஞ்சல் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து தவில் நாதஸ்வர கச்சேரியும், வயலின் கச்சேரியும் இடம் பெற்றது. சிறப்பு நிகழ்வாக வான வேடிக்கைகள் முழங்க வவுனியா நகரின் பிரபல ஆசிரியர்களின் ஒன்றினைவில் சித்தி விநாயகர் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் சர்வ தேச இந்து இளைஞர் பேரவையினால் சிறப்பு பட்டி மன்றம் இடம் பெற்றது.
பெரிய புராணத்தில் பெரிதும் விஞ்சி நிற்பது ஆண்டவன் சோதனையா, அடியார் சாதனையா என்ற தலைப்பில் புதுகுடியிருப்பு கலாசார உத்தியோகத்தரும் பண்டிதருமான வி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
ஆண்டவன் சோதனை என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் அ.லோகேஸ்வரனும் இந்து நாகரிக ஆசிரியர் சிவ.கஜனும் அடியார் சாதனை என்ற தலைப்பில் புவியியல் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனும் மூத்த கணித ஆசிரியர் ல .சதீஸ் அவர்களும் வாதாடினர். இறுதியில் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவர் இக் கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிட தக்கதாகும்.