மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பரிதாபமாக பலியான இளைஞர்கள்!!

751

பண்டாரகம..

நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ பொதுப்பிட்டிய பணாபிட்டிய வீதியை சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும் வாத்துவ தெல்துவ அரியகம பிரதேசத்தை சேர்ந்த சங்தேஷ் சுலோச்சன பியரத்ன ஆகிய 18 வயதுடைய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் இளைஞர்கள் குழுவுடன் உல்லாசமாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​உயிரிழந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரந்துடுவ பொலிஸார் வந்து வீதியில் படுகாயமடைந்து இருந்த இரு இளைஞர்களையும் மீட்டு ​​மொரந்துடுவ கோனதுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.