வவுனியாவில் 16 வயது தங்கையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சகோதரன் கைது!!

1675

பட்டக்காடு பகுதியில்..

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.