கணவரின் உடலையாவது தாருங்கள் : வியட்நாமில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கண்ணீர் கோரிக்கை!!

1003


கிரிதரனின் மனைவி..



வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.



சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.




இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவிகூறுகையில், அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.


எமது பிள்ளைகளை நன்றாக வளர்கவேண்டும், வறுமையில் இருந்து மீளவேண்டும் என்பதற்காகவே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். ஆனால் இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கண்னீருடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்பதே கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, என உயிரிழந்தவரின் மனைவி கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.