தம்பிய நல்லா பாத்துக்கப்பா… உருக்கமான ஆடியோ வெளியிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

279

சிவகங்கையில்..

சிவகங்கை அருகே மகனுக்கு வாட்சப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (48). இவருக்கும் மகேஸ்வரிக்கும் (40) திருமணமாகி இரு மகன் உள்ளனர்.

மகேஸ்வரி தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில்ல் பாண்டியன் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிராம மக்கள் சிவகங்கை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முதற்கட்டமாக போலீசார் விசாரணை நடத்தியதில், மகேஸ்வரி தனது இறப்பு முன்னதாக தனது மகனுக்கு வாட்சப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியதை கண்டுபிடித்தனர்.

அந்த ஆடியோவில் “தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள், நன்றாக படி, என்னுடைய இறப்பிற்கு காரணம் உன்னுடைய அப்பா தான் என அழுது கொண்டே என்னை மன்னித்துக் கொள்” என்று மகேஸ்வரி உருக்கமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் மகேஸ்வரியின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் மகேஸ்வரியின் கணவர் பாண்டியனை பிடித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார்