வீட்டு வாசலில் கல்லூரி மாணவிக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

335

திருவனந்தபுரத்தில்..

தன்னுடைய காதலி வேறு ஒருவருடன் பேக் ஐடியில் பேசியதால், சந்தேகத்துடன் வெறிப்பிடித்த காதலன், 17 வயதான கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் வைத்து காதலியின் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கேரளாவில் 17 வயது சிறுமியை அவரது காதலனே கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக பாலியல் குற்றங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் காதல் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்து உள்ள வடசேரி கோணத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா(17). கல்லூரி முதலாம் ஆண்டு பிடித்து வரும் இவர், பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு (20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, காதலர்களுக்கு இடையே சமீபத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு கொடூர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.

இதற்காக கோபு சமூகவலைதளத்தில் ‘அகில்’ என்ற பெயரில் போலியாக கணக்கு ஒன்றை உருவாகியுள்ளார். பின்னர், கோபு அகில் பெயரில் சங்கீதாவுடன் சமூகவலைதளத்தில் நட்பாக பேசியுள்ளார்.

தனது காதலன் தான் அகில் என்ற பெயரில் தன்னுடன் பேசுகிறார் என்பதை அறியாத சங்கீதா தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலி தான் உருவாக்கிய பேக் ஐடியில் வேறொரு நபருடன் பேசுவதால் ஆத்திரமடைந்த கோபு தனது காதலி சங்கீதா துரோகம் செய்வதாக நினைத்துள்ளார்.

இந்த நிலையில், உன்னை சந்திக்க இன்று இரவு 1.30 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சங்கீதாவிடம் ‘பேக் ஐடி’ அகில் (கோபு) கூறியுள்ளான். இதை நம்பிய சங்கீதா நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டு வாசலுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு ஹெல்மெட் அணிந்தவாறு கோபு வந்துள்ளான். தன்னுடன் ஆன்லைனில் பேசிய அகில் தான் வந்துள்ளான் என்று எண்ணிய சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார்.

ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்தது கோபு போல் உள்ளதை அறிந்த சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார். அப்போது, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு கோபு தனது காதலி சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றான். நள்ளிரவில் சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.