கிளிநொச்சி பரந்தனின் பேரூந்தில் கைவரிசையை காட்டிய மூன்று பெண்கள் நையப்புடைப்பு!!

991


பேரூந்தில் கைவரிசையை..



கிளிநொச்சி பரந்தன் சந்தியில் இன்று (30.12.2022) மதியம் 2.30 மணியளவில் பேரூந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி தனியார் பேரூந்து பயணித்துள்ளது இதன் போது இயக்கச்சி பகுதியினை பேரூந்து அண்மித்த சமயத்தில் பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபா பணம் மற்றும் வலைகாப்பு ஒன்றும் களவாடப்பட்டிருந்தது.




பேரூந்து பரந்தன் சந்தியினை அண்மித்த போது சந்தேகத்திக்கிடமாக நின்ற பெண்கள் மூவரை நடத்துனர் விசாரித்த போது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளமையுடன் பொதுமக்களினால் குறித்த மூன்று பெண்களும் நையப்புடைக்கப்பட்டனர்.


அதன் பின்னர் அவர்கள் வசமிருந்த பணம் மற்றும் நகை மீட்கப்பட்டதுடன் பரந்தன் சந்தியில் நின்ற பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.