மாமியாரால் உயிரைவிட்ட புதுமணப்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

269


திருப்பத்தூரில்..



திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா (27) என்பவர் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த ஆதிலட்சுமியை (22) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து காதலித்து வந்துள்ளார்.



கோவை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.




காதலுக்கு தொடக்கத்தில் எதிர்த்த ஆதிலட்சுமியின் பெற்றோர், பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.


திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி ஆதிலட்சுமியிடம் கணவர் குடும்பத்தினர் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதற்கு தாமதபடுத்தியதாக கூறி மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி, வீட்டில் தனது அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.


வெளியே வேலைக்கு சென்றிருந்த கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து அறையை திறந்து பார்த்த போது தான் இது தெரிய வந்தது. இதனால் அப்பெண்ணின் காதல் கணவர் கதறி அழுதார்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் ஆதிலட்சுமி பிரேத உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறுக்கு ஆய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஆதிலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பெண்ணின் உறவினர்கள், ஆதிலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்தை விரைந்து வந்த போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறியதன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆவதால், இந்த விசாரணை திருப்பத்துார் சப் -கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.