யாழில் பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை!!

713

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று (26.03.2023) உயிரிழந்துள்ளது. குழந்தையின் இறப்பு விசாரணையினை,

தெல்லிப்பழை மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தார். குறித்த குழந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.