வவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகளை டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் சென்றபோதே கைதாகியுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதுரை மரங்களின் பெருமதி இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக, முதுரை மரக்கட்டைகளுடன் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.