வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நேற்று (28)வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் கிளையில் வைத்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில், வவுனியா மாவட்ட திட்டமிடல் பொறுப்பதிகாரி எஸ்.கிருபாசுதன், சமுர்த்தி முகாமையாளர் வில்வராஜா, பிரபல வர்த்தகரும் சிறிரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் ஆன சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியூதினால் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.