வவுனியா ஓமந்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!!

2688


வவுனியா ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



குறித்த நபர் தனது தென்னந்தோப்பில் இருந்த போது, மற்றொரு நபர் ஒழிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 52 வயதான நபரே காயமடைந்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்



சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலிற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப்பட்டது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.