வவுனியாவில் விபத்து – மோட்டர்சைக்கிளும் காரும் மோதியதில் இருவர்காயம்..!

400

வவுனியா பட்டக்காடு முதலாம் ஒழுங்கை சந்தியில் காரும் மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்று (29) மாலை வவுனியா குருமன்காட்டில் இருந்து பட்டக்காடு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளானது மடுவில் இருந்து வவுனியா நோக்கி மன்னார் வீதிவழியாக வந்த காருடன் முதலாம் ஒழுங்கை சந்திப் பகுதியில் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டக்காட்டை சேர்ந்தவர்களான சப்ராஸ் (வயது22), அஸ்ரப் (வயத 24) ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

acc1

acc2