வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கம், டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து நகரசபை மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸாரின் அனுசரணையுடன் இச்சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக வவுனியா பஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கி வந்த பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு காணும் பொருட்டு பொலிஸாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.