எனக்கு உயிரை கொடுத்து
உலகை பரிசாக காட்டிய
எனது முதல் உயிர் தோழி
என் ” அன்னை”
உலகை பரிசாக கொடுத்த
என் அன்னைக்கு அடுத்து
என் உள்ளத்தை எப்போதும்
குழந்தையாய் வைத்திருப்பவள்
நீயடி…
நீ என்ன இயற்கையின் அவதாரமோ
உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம்
என்ற எதிரி எட்டிபார்க்க
கூட தயங்குகிறது,
சண்டைகள்தான் நமது இனிய
மொழியோ ,
சங்கீதம் போல் தினமும்
ஒலிக்கிறது ,
வாழ்கையில் வழிகாட்ட பல
நண்பர்கள் இருந்தாலும்
என் வலிகளை நீக்க நீ
ஒரு தேவதை போதுமடி,
இறந்துபோ என்று சொல்
இன்பமாக இறந்து விடுவேன்
ஆனால்
பிரிந்து போ என்று சொல்லி
விடாதே
இறுதி வரை
என் நட்பை!
-முத்து ஸ்ரீ-