வவுனியா பூந்தோட்டம் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா எனவும் மற்றொருவர் பூந்தோட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் எனவும் தெரியவருகிறது.
காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
(திரு)