வானம்
சூரிய குளியலுக்காய் தயாராகியது..
நிலவு இலவச மின்சாரத்தை
இடை நிறுத்திக் கொண்டது..
நட்சத்திரங்கள்
தலையணை தேடின..
சேவல்களும் குயில்களும்
செய்தி அறிவித்தன..
கதிரவன் வரவேற்பு
புன்னகைக்காய்
மொட்டுக்கள்
உதடுகள் அசைக்கத்
தொடங்கின..
அவள் விழிகளுக்கு மட்டும்
இன்னும் விடியவில்லை
ஏனெனில்..
அவன் நினைவுகளின்
கனவுத் தொடர்
இன்னும் முடியவில்லை..
-திசா.ஞானசந்திரன்-