உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

89

ஒவ்வொரு மாதமும்
கலைந்து போயின
எதிர்பார்ப்புகள்…..

எட்டு வருடங்களாக
நுகரவில்லை நாசி
பால் மணம் வீசும்
மழலையின் நறுமணத்தை…..

குருதியோடு சேர்ந்து
கரைந்து ஓடின கனவுகள்…

கடவுள்களும் மருந்துகளும்
அன்றாட அவசியங்கள்…

கிழித்தும் நிருத்தும்
பார்த்தாகிவிட்டது உடலின்
அத்தனை செல்களையும்…..

ஏதோ ஒரு அற்புத கணத்தில்
கிட்டியிருக்கக்கூடும்
தேவதையின் கருணை…….

இன்னும்
மாதங்கள் இருக்கின்றன
ஒரு பிஞ்சு பிரபஞ்சத்தை
மார்பணைத்து மகிழ …!!!