வவுனியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் கொள்ளை..

528


robbery

வவுனியா நெடுங்கேணிப் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிற்கு வந்த இருவர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது



நேற்று இரவு 9.10 மணியளவில் மதுபான நிலையம் பூட்டப்படும் வேளையில் இரு நபா்கள் வந்து தமக்கு சாராயம் வேண்டுமென்று கூறியுள்ளனர்.

அப்போது விற்பனையாளர்கள் உள்ளே சென்று சாராயம் எடுக்கும் வேளை சடுதியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் உட்பக்கமாக வாயில் கதவை பூட்டியதுடன் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.



இதனையடுத்து, அங்கிருந்த 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, இம்மது விற்பனை நிலையத்தில் இரண்டாவது முறையாகவும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.