வடமாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்பாட்டில் மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட கலைஞர்களின் ‘குருசேத்திரம்’ நாட்டிய நாடக நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அவை நிறைந்திருந்த இந் நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி, கல்வி பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண கலாசார திணைக்கள அதிகாரி சிறிதேவி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதேவேளை, இந் நிகழ்வில் கலந்து கொண்டவட மாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களை கௌரவித்தார்.