வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

428

வவுனியா மரக்கறிச் சந்தை வியாபாரிகள் சந்தைக்கு வெளியில் இடம்பெறும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர சபையினால் மரக்கறி வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கென கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டு தினமும் நில வாடகையாக 50 ரூபா அறவிடப்பட்டு வரப்படும் நிலையில், சிலர் வேறு தேவைகளுக்கு வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தங்களது தொழில் பாதிப்படைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நகரசபை கட்டளைச் சட்டத்தை மதித்து மரக்கறிச் சந்தை உள்ள இடத்தில் இருந்து 500 மீற்றருக்குள் உள்ள அனைத்து மரக்கறிக் கடைகளையும் அகற்றுமாறு கோரி நகரசபைத் தலைவர், பிரதி பொலிஸ் மா அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

vavuniya