என் காதலி போலவே..

484


Kaathali

உன்னால் நொந்துதான்
காலணி செய்தார்கள்
உன்னை நீக்கியே
மீனினை உண்பார்கள்..



உன்மேல் அழகுறும்
மலர்தனைக் கொய்வார்கள்
உன்னைப் பிரித்துதான்
சுளைதனை சுவைப்பார்கள்..

உன்னை விலக்கியே
எலுமிச்சம் கனிதனைப்
பறிப்பார்கள்
தாகம் நீக்கிடும்
பானமும் செய்வார்கள்..



உன்னை கிளையுடன்
வெட்டி வேலி அமைப்பார்கள்
பயிர்களைக் காத்துதான்
பயன் பல பெறுவார்கள்..



நீ
இருக்கும் இடமெலாம்
இன்பமும் இனிமையும்
இருக்கும் இருந்தும்
நீ முள்ளு
என் காதலி போலவே..


திசா.ஞானசந்திரன்