மந்திரவாதியை வற்புறுத்தி மனித மலத்தை உண்ண வைத்த மக்கள்!!

415

UP-1

இந்தியாவில் மந்திரவாதி ஒருவரை ஊர் மக்கள் கட்டாயப்படுத்தி மனித மலத்தை உண்ண வைத்துள்ளனர். மேகாலயா மாநிலம் கிழக்கு காசி மலை மாவட்டம், மாவ்ரிங்காங் கிராமத்தில் வசித்து வருபவர் நோபிங் நாங்சிட். இவரும் இவரது குடும்பத்தினரும் மாந்திரீக வேலைகள் செய்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த கிராமத்தில் உள்ள நான்கு சிறுமிகள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தில் அவர்களுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்துள்ளன. அத்துடன் தூக்கத்தில் மந்திரவாதி நாங்சிட் பெயரை முணுமுணுத்ததாகவும் தெரிகிறது. எனவே, மந்திரவாதி சூனியம் வைத்ததால்தான் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக கடந்த 20-ம் திகதி ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பெரியவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது சூனியம் செய்த மந்திரவாதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். அதுவும் மனித மலத்தை அவரை சாப்பிட வைத்தால்தான் சூனியம் விலகும் என்று தெரிவித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, மந்திரவாதியை கட்டாயப்படுத்தி மலத்தை தின்ன வைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிறுமிகள் 4 பேரின் உடல்நிலை தேறியதாக பஞ்சாயத்து துணைத் தலைவர் தெரிவித்தார். முதியவர் ஒருவரை மலம் தின்ன வைத்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அந்த கிராமத்திற்கு நீதவான் மற்றும் துணைக்கோட்ட பொலிஸ் அதிகாரி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் அறிக்கை அளித்தபிறகு, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.