வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா தமிழ்ச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமைஅன்று ‘யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்’ தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் நடத்திய 2014ம் வருடத்துக்கான சிறுகதைப்போட்டியில் வெற்றியீட்டிய படைப்பாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட சிறுகதைகளின் ‘செவ்வரத்தை’ நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழருவி சிவகுமாரன் உட்பட பல முக்கியஸ்தர்களும் சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி வைபவத்தில் சிறுகதைகள் எழுதி வெற்றி ஈட்டியவர்கள் கௌரவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
-பிரதேச செய்தியாளர் –