வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 27 மாணவ மாணவிகள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற்படி பாடசாலையில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும் .
மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்களுடன் பெற்றோரும் வாழ்த்துகின்றனர் . அத்துடன் இம்மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்திய ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது .
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் வாரங்களில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 27 மாணவ மாணவிகளுக்கு வவுனியா நெற் இணையமும் தனது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறது .