வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் எதிர்வரும் 12.11.2015 அன்று ஆரம்பமாக உள்ளது. விரத நாட்களில் பூஜைகள் நண்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகி அபிசேக பூஜைகளுடன் முருகப்பெருமான் மாலையில் வீதி உலா வருவார்.
விரத நிறைவு நாளான 17.11.2015 அன்று நண்பகல் 1.00 மணி பூஜையுடன் மாலை 4.00 மணியளவில் மலையடிவாரத்தில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்கரிக்கும் சூரசம்கார நிகழ்வு இடம்பெற்று மறு நாள் காலை 6.00 மணியளவில் பாரணை பூயை இடம்பெறும்.
அத்துடன் 18.11.2015 அன்று மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வானை சகித முருகப்பெருமானுக்கு நண்பகல் 2.00 மணியளவில் திருக்கல்யாண நிகழ்வு இடம்பெற உள்ளது.
-ஆலய நிர்வாக சபை –