மானத்தைக் காப்பாற்ற ஓடும் ரயிலிருந்து குதித்த பெண்!!

355

rain

கொல்கத்தாவில் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை ஆசாமி ஒருவர் மானபங்கம் செய்துள்ளார். இந்த ஆசாமி உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் என்பது தெரிய வந்துள்ளது.

இவர் ரயிலில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கியதுடன் அவரை கற்பழிக்க முயற்சி் செய்துள்ளார்.
இதனால் உதவிக்கு ஆள் இல்லாத நிலையில் தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், சென்று கொண்டிருந்த ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்த அந்த பெண்ணை உள்ளூர் மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அந்த பெண்ணின் சிகிச்சை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசாமியை ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர்.