வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஒரு தொகுதி உபகரணங்கள் தளபாடங்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கபட்டது. மேற்படி நிகழ்வானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் வலய கல்விபணிப்பாளர் திரு. எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
நேற்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவமோகன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன் ம.தியாகராசா இ.இந்திரராசா எம்.பி நடராஜ் மற்றும் தர்மபால செனிவிரட்ன ஆகியோர் அழைக்கபட்டிருந்தனர்.
ஆனால் ஜீ.ரி.லிங்கநாதன் இ.இந்திரராசா எம்.பி நடராஜ்,மற்றும் சுகாதார அமைச்சரின் சார்பில் வைத்தியர் சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் . மிகவும் யுத்தத்தால் பாதிப்படைந்து பின்தங்கியுள்ள வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த முன்பள்ளிகள் பாடசாலைகள் என்பவற்றுக்கு வடமாகாண சபை உறுப்பினர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடைமூலம் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் போடோபிரதி இயந்திரம் ஒலிபெருக்கி முதலிய பொருட்களை பாடசாலை அதிபர்களிடம் கையளித்தனர்.
மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு வலயத்துக்கு உட்பட பாடசாலைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேலி சுற்றுமதில் மைதான துப்புரவு மற்றும் குடிநீர் மின்சாரம் கட்டிட புனர்நிர்மாணம் போன்ற வேலைகளுக்கு உதவி வழங்கியிருந்தமையும் வவுனியா வடக்கு வலயத்தினரால் சுட்டிகாட்டபட்டு நன்றி தெரிவிக்கபட்டது ..