இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

1376


law-college-lanka

சட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன.



மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் அடிப்படைத் தகுதிகள் உயர்தரம் 3 பாடம் சித்தி சாதாரண தரம் ஆங்கிலம் C தரச்சித்தி .

சட்டத்தரணியாக வருவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். பொதுஅறிவு,பொது உளச்சார்பு மற்றும் மொழிப் பரீட்சை என இரண்டு பாடங்கள் இடம்பெறும். இரண்டில் ஒன்றை கட்டாயமாக ஆங்கிலத்தில் தோற்றுதல் வேண்டும். ஆங்கில புலமை குறைந்தவர்கள் பொது அறிவு, உளச்சார்பு பரீட்சையை ஆங்கிலத்தில் தோற்றுவதுடன் மொழிப் பரீட்சையை தமிழில் தோற்றுவது இலகு.



தெரிவு செய்பவர்களுக்கு தங்குமிட வசதிகள் சட்டக்கல்லூரியினால் வழங்கப்படுகின்றன. அத்துடன் 24 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மகாபொல புலைமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.



இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு இல்லாது இருப்பது கவலைக்குரிய விடயம்.
விண்ணப்பப் படிவங்களை சட்டக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள HNB வங்கியில் பணத்தை செலுத்தி சட்டக்கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.