1000 கோடி இந்திய ரூபாய் மோசடி : பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி காவல்துறை..

480

ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு. ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26ம் திகதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக வாங்கியுள்ளார் சீனிவாசன்.

ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர்ஸ்டார் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் முறைப்பாடு தெரிவித்தார் திலீப் இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.