வவுனியா வைரவ புளியங்குள குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பத்தவர்களை பின்னால் வேகமாக வந்த ஆட்டோ தட்டி சென்றமையினால் தடம் புரண்டு விழுந்தனர் இதனால் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்
இப்பாதையில் பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும் ஆட்டோவினால் விபத்துகள் ஏற்படுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துகள் ஏற்படும் பாதையாக காணப்படுவதனால் பெரிய வாகனங்கள் செல்வதற்கு மாற்று வழியை பாவிக்க வலியுறுத்துமாறு உரியவர்களிடம் வலியுறுத்திய போதும் இது வரை நடவடிக்கை எடுக்க படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்