ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு 40 வைத்தியர்கள் கூடிய அதிசயம்..

418


 

one_girl_birth_002



செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா என்ற 23 வயதுப் பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.



நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும் 1 பெண் குழந்தையையும் இவர் பெற்றெடுத்தார்.


இயற்கையான முறையில் கருத்தரித்த இந்த 5 குழந்தைகளும் 1.05 கிலோவுக்கும் 1.34 கிலோவுக்கும் இடைப்பட்ட எடையில் நல்ல நிலையில் பிறந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர் .

480 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இதுபோல் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கும் அரிய வாய்ப்புள்ளது என்பதால் பிரசவத்தின்போது சுமார் 40 வைத்தியர்கள் பணியாற்றியதாக மருத்துவமனையின் நிர்வாகம் கூறியுள்ளது.