கொழும்பு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது…!!

474

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ஒருவர் டெங்கு நோய் தாக்கி இறந்துபோனதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, டெங்கு பரவுகை காரணமாக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

டெங்கு தொடர்பான துப்பரவு பணிகளுக்காக ஒரு வார காலத்துக்கு பல்கலைக்கழகத்தின் கலை, சட்ட, முகாமைத்துவ வளாகங்கள் வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் வாழக்கூடிய பல இடங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக பரீட்சைகள் கூட ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.