காகிதப்பூ

1316


Flower

மலரும் மலர்கள் யாவும்
பெண்ணவள் வண்ணம்.



மணம் கொள்ளா மலர் நீ
யார் செய்த பாவம்.

மனம் கொண்ட மனிதரும்
பணம் கொண்டே பாசம்.



பெண் மலர் உன் சீர் தனம் காணா,
மண் மகள் கேட்பாள் சீதனம்.



உன்னை ஈன்ற தாயவள் மகிழ்வு
உனக்கில்லை. பலிச்சொல் மலடியாம்.


காகிதப் பூ நீ வாடாதே.
காந்தள் மலராய் துணிந்து எழு.

வீண் பழி தானே எரிந்து விடும்.
விசையாய் விண்ணைத் தொட்டு விடு.


ஒரு பொழுதும் வாடாத காகிதப் பூ.
வாழ்வை கொடுத்திடு பிறர்க்கென்றும்.

உன் அன்பைத் தேடும் சொந்தங்கள்
ஆயிரம் உண்டு உலகில்.

எதற்கு வீண் தயக்கம்.
துணிந்திரு விடிந்திடும் உலகம் தானே.

-குமுதினி ரமணன்-