அமைதியும் மௌனமும்
உலகின் அழகிய விழிகளாகலாம்.
தூய்மையும் சுவாசமும்
பிராண வாயுவாகலாம்.
ஒற்றைக்கல் தீப ஒளி
அகல் விளக்காகலாம்.
இயற்கையின் பச்சையில்
இனிமை காணலாம்.
தெளிந்த நீர் போல்
கண்ணாடியாய் மனதைக் காணலாம்.
எனக்குள் உலகம்.
எனக்கேன் உலகம்.
-குமுதினி ரமணன்-