சிறுவர் உரிமைகள், திறன் விருத்தி கலாசார மேம்பாட்டு நிகழ்வு..!

621


வவுனியா: எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் மற்றும் திறன் விருத்தி கலாசார மேம்பாடு தொடர்பான விழா, வவுனியா நாகரசபை மண்டபத்தில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அதிகாரசபையின் அதிகாரி திரு த.செல்வகுமார் அவர்கள்,இன் நிகழ்விலே போர் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட பாடசாலைச் சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நடைபெறுவதோடு சிறுவர் உரிமைகள், வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.