இலண்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாளிகை வைத்திருக்கும் பிச்சைக்காரர்..

454


simon_wright_001

லண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை விதித்தது. லண்டனில் நெட்வெஸ்ட்( Natwest) வங்கியின் முன் தினசரி 37 வயதான சைமன் ரைட் என்ற பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.



இதன்மூலம் அவருக்கு தினசரி £300 வரை வருமானம் கிடைத்தது. மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தில் இருந்த் சென்று Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மிகவும் வசதியாக இருந்து கொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்ற வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.



வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பிச்சைக்காரர் யாசகம் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.