இலங்கை செய்திகள்

காமுகர்களை அழித்து காரிகைகளை காப்பாற்று : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்வத்தை கண்டித்து இன்று (15.05) கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிளிநொச்சி மாகா...

யுத்­தத்தின் போது இறந்த உறவுகளை நினைவு கூரலாம் : பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்!!

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டில் எந்த பகு­தி­யிலும் தமி­ழர்கள் யுத்­தத்தின் போது இறந்த தமது உற­வு­களை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்­க­ளது உரிமை என பொலிஸ் ஊடகப்...

உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!!

கொழும்பு நவகம்புர பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் சடலம் அழுகி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை!!

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர வகுப்பு மாணவி நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்று...

இலங்கையில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம்?

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக...

கொரியாவில் வேலைவாய்ப்பு தொடர்பில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை!!

கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க தனிநபர் எவருக்கும் முடியாது என வெளிநாட்டு...

ஹெரோயின் வைத்திருந்த 15 வயதுச் சிறுவன் கைது!!

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 15 வயது சிறுவன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனிடம் இருந்து 1 கிராம்...

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு!!

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். நோர்வேயில் ”Leadership Foundation” எனும்...

காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!

காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி...

இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!

கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...

பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!

ஹபரன - தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார...

இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!

இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!

நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...

இலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்!!

யுத்தம் காரா­ண­மாக நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­த­வர்­களில் 65 பேர் நாளை புதன்­கி­ழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்­கு­டி­யேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்த 65 இலங்­கை­யர்­களும்...