இலங்கை செய்திகள்

ஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் : மக்கள் கடும் விசனம்!!

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால்...

தடைவிதிக்கப்பட்டுள்ள க்லைபொசேட் 160 பெரல்கள் மீட்பு!!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விஷ தன்மைமிகு இரசாயனங்களான க்லைபொசேட் 160 பெரல்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை இலங்கை சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த இரண்டு கொள்கலன்களும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதெனவும், சந்தேகத்தின் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட...

காதல் விவகாரம் : 15 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞர்!!

கொழும்பில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை...

இளம் யுவதி தற்கொலை!!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினை சேர்ந்த இளம் யுவதி கிருமிநாசினியை அருந்தி உயிரிழந்துள்ளார். சின்னவத்தை கிராமத்தினைச் சேர்ந்த இராமச்சந்திரன் விதுசியா (வயது-17) எனும் இளம் யுவதியே இவ்வாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நேற்று...

இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!!

  மயிலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்மைலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் "யோகதிராவிடகுமார் யோகேட்குமார்(20) என்ற இளைஞரே தனது வீட்டு வளையில் சீலையொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்று...

50 மணித்தியாலங்களாக தொடர்ந்து முத்தம் : அமெரிக்காவில் கார் வென்ற இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் 50 மணித்தியாலங்களாக கார் ஒன்றுக்கு முத்தம் கொடுத்து இலங்கை பெண்ணொருவர் பெறுமதியான பரிசொன்றை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஆஸ்டின் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய டிலினி ஜயசுரிய என்ற...

கண்களை கலங்க வைக்கும் சம்பவம் : எஜமானுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நாய்!!

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 33 உயிர்கள் பலியாகி உள்ளன. மேலும் 50 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம் ஒன்று...

திருகோணமலையில் 3 வயதுக் குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகம்!!

திருகோணமலை – தோப்பூர், அல்லை நகர் பகுதியில் 3 வயது குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது சகோதரரே...

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்கத் தடை!!

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். எதிர்காலத்தில் புதிதாக சிகரெட் கம்பனிகளுக்கு...

இந்த இளம் பெண்ணை தெரிந்தால் உடனடியாக அறிவியுங்கள்!!

மினுவாங்கொட பிரதேசத்தில் பணமோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை தேடி பொலிஸால் வலை வீசியுள்ளனர். குறித்த பெண் பல்வேறு தொலைபேசி விற்பனை நிலையங்களில் தொலைபேசிகளை காசோலைகள் மூலமாக வாங்கி 3,264,740 ரூபா வரை மோசடி...

சிறுவர்களை பெற்றோர்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்துங்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

  சிறுவர்கள் அவர்களின் பெற்றோருடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அதுவே சிறுவர்களுக்கான சிறந்த சூழலாகும் என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். சிறுவர்...

கணனி தகவல்களை அழிக்கும் வைரஸ் : இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை!!

மின்னஞ்சல் மூலம் தற்போது கணனி வைரஸ் ஒன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே இந்த வைரஸில் இருந்து...

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் முழு குடும்பத்தையும் இழந்து தவிக்கும் சிறுவன்!!

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு...

இலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்!!

வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. சூரியவெவ நகரத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர், தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானதாக தெரியவந்துள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் ஆணொருவருக்கு வழங்கப்பட்ட...

இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!!

2016 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இலங்கையில் 26,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அநுராதபுரம், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...

திருவிழா மோதலில் ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!!

  ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18.04) இரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...