வவுனியா செய்திகள்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு மூடுவிழா!!

இன்று (04.02.2017) பிற்பகல் 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் புதிய பேரூந்து நிலையத்தினை முடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்...

வவுனியாவில் ஆயுதமுனையில் 3 வீடுகளில் கொள்ளை!!

  வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் நேற்று(03.02.2017) இரவு 8.45 மணியளவில் மூன்று வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்று இரவும் 8.45 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் 4ம்...

வவுனியாவில் 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

  வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் (04.02.2017) 3ம் நாளாக தொடர்கின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக...

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா.! (படங்கள்)

வவுனியா சாந்தசோலை  ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல்  பிரதிஷ்டா பிரதம குரு "சிவாகம பூஷணம்" சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில்...

வவுனியாவிலுள்ள மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து...

வவுனியாவில் இலங்கையின் 69வது சுதந்திரதின நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இன்று (04.02.2017) காலை 8.20 மணிக்கு சுதந்திர நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஹோகன புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட...

வவுனியாவில் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!!

  சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை A9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. வவுனியா,...

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!

  இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்...

வவுனியா ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் திறந்து வைப்பு!!

  வவுனியா, ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் இன்று (03.02.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான...

வவுனியாவில் கலாச்சார மண்டபம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைப்பு!!

  இன்று (03.02.2017) காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை வவுனியாவில் பல்வேறு கட்டிடங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண...

வவுனியாவில் இரு பொதுப் பூங்காக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்து வைப்பு!!

  வவுனியா நகரசபை பொதுப் பூங்கா நெல்சிப் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்டு நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 9 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பூங்கா இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர்...

வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள், 100 கற்குகைகள், ஓலைச்சுவடிகள் : வியப்பில் மக்கள்!!

வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபிகள், 10 அடி உயரமான சிலைகளும் 110க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே குறித்த தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

வவுனியா இ.போ.ச சாலைக்கு விரைந்த செல்வம் அடைக்கலநாதன் : பரபரப்பான சூழ்நிலை தொடர்கின்றது!!

  இன்று (03.02.2017) பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர்...

வவுனியா இ.போ.ச ஊழியர்களால் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு இறுதிக்கிரியை : கொடும்பாவியும் எரிப்பு!!

  வவுனியாவில் இன்று (03.02.2017) தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக...

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில்!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (03.02.2017) அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாலபே தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை மருத்துவ சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம்...

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

  வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில்...