இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, கொமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளது குறித்து கொமன்வெல்த் அமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கும் அடுத்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது குறித்து கமலேஸ் சர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பரஸ்பர மற்றம் தன்னார்வ நிதியம் கொமன்வெல்த் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.
தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு கனடா நீண்டகாலமாக – பெறுமதிமிக்க உதவிகளை அளித்து வந்துள்ளது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.