வவுனியா ஐக்கியப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின், புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

400

வருடப்பிறப்பினை முன்னிட்டு ஐக்கியப்பறவைகள் விளையாட்டுக் கழகத்தினால் 14.04.2014 அன்று விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிவாஜி தலைமையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக வருகை தந்த வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தேசமான்ய சு.குமாரசாமி, வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய செயலாளர் கு.சஜிக்குமார், சிறப்பு விருந்தினர்களாக அட்டமஸ்கட பாடசாலை அதிபர் திரு.ராஜ்குமார் விளையாட்டுக் கழகத்தின் போசகர்களான; பத்மநாதன். அண்டனி, பொன்னம்பலம் இவர்களுடன் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர்களான ரகு, சிந்து ஆகியோர் கலந்து கொண்டு போட்டியினை சிறப்பித்தார்கள். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதில் ஆண், பெண், சிறுவர்களுக்கான பலதரப்பட்ட விளையாட்டுகள் நடைபெற்றது. அத்துடன் பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் போட்டியில் இறுதிச்சுற்று போட்டி ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகத்திற்கும், தரணிதீபம் விளையாட்டுக்கழகத்திற்கும் நடைபெற்று தரணிதீபம் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

இவர்களுக்கான வெற்றிக்கிண்ணம் வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தேசமான்ய சு.குமாரசாமி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வெற்றிக்கிண்ணம் தேசமான்ய சு.குமாரசாமி அவர்களால் விளையாட்டுப் போட்டியினை நடாத்தும் விளையாட்டுக் கழகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

1 2 3 4 5 6