இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!!

314

Tsunami

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று (24) மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.