வவுனியாவில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள்!!

473

 
1983 யூலை திங்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் வவுனியாவில் இன்று(27.07.2016) மாலை 3.30 மணியளவில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன். வினோ நோதாராலிங்கம், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், சிவாஜிலிங்கம், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.

1 DSC_0161 DSC_0163 DSC_0164 DSC_0165 DSC_0168 DSC_0169 DSC_0171 DSC_0175 DSC_0176 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0181 DSC_0182 DSC_0183 DSC_0184 DSC_0185 DSC_0186 DSC_0187 DSC_0188 DSC_0191 DSC_0192 DSC_0194 DSC_0195 DSC_0196 DSC_0197 DSC_0198 DSC_0199 DSC_0200 DSC_0201 DSC_0203 DSC_0205 DSC_0206 DSC_0207 DSC_0213 DSC_0214 DSC_0215