1983 யூலை திங்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் வவுனியாவில் இன்று(27.07.2016) மாலை 3.30 மணியளவில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வுகள் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன். வினோ நோதாராலிங்கம், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், சிவாஜிலிங்கம், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.