வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமாகி விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் உற்சவம் 01.09.2016 வியாழக்கிழமை சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.
தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
சென்றவருடம் இலங்கைலே அதி உயரத்தை உடைய ஐயனார் சிலை அமைத்து கும்பாபிசேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-கீதன்-