வவுனியா தனியார் பேரூந்து நடத்துனரின் அடாவடித்தனம் : மக்கள் விசனம்!!

544

Bus

வவுனியாவைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுவனத்தை சேர்ந்த கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று இருக்கைகளுக்கு மேலதிகமாக வவுனியாவில் வைத்து கடந்த 26.08.2016 வெள்ளிகிழமையன்று மாலை 6.30 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஆடுமாடுகளைப் போல் ஏற்றி பிரயாணம் செய்துள்ளது.

மேற்படி பேருந்தில் ஏறிய பயணிகளிடம் கட்டணம் தொடர்பாக எதுவித அறிவித்தலையும் வழங்காது சிங்களத்தில் மட்டுமே உரையாடிய தமிழ் நடத்துனர் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கட்டணங்களை அறவிட்டதுடன் அதற்கான அந்த தனியார் பேருந்து நிறுவனத்துக்கு சொந்தமான பயண பற்றுச் சீட்டினை வழங்காமல் பேருந்தின் இலக்கமற்ற பயண பற்றுச் சீட்டினை வழங்கியதுடன் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதும் கட்டணம் தொடர்பாகவும் தட்டிகேட்ட பயணிகளுடன் தனிச் சிங்களத்தில் மட்டுமே உரையாடியுள்ளார்.

14159802_1289201767766440_472168449_n

நின்ற நிலையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட பயணிகளிடம் 275 ரூபாவும், வவுனியா கிளிநொச்சி நோக்கி நின்று பயணத்தினை கொண்ட பயணிகளிடம் 175 ரூபாவும் அறவிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ரூபாய் 1000 செலுத்தி நின்றநிலையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதும் இளைஞர் குழு ஒன்று நடத்துனரிடம் ஒருவழியாக தங்களது மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்த்தை மீளப்பெற்ற பின்னர்தான் இறங்கிச் சென்றுள்ளனர்.