9 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : 60 வயது சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

337

Abuse

9 வயது சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்ற சந்­தே­கத்தில் கைதான சந்­தேக நபரான 60 வயது முதி­ய­வரை எதிர்­வரும் 8ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான திரு­மதி நளினி கந்­த­சாமி உத்­த­ர­விட்டார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது, அட்­டா­ளைச்­சேனை தைக்கா நகர் பிர­தே­சத்தில் சுமார் ஒரு­மா­தத்­துக்கு முதல் சிறுவன் வீதியில் விளை­யாடிக் கொண்­டி­ருக்கும் போது சந்­தேக நபர் அவ­ரது வீட்­டுக்கு சிறு­வனை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.