9 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைதான சந்தேக நபரான 60 வயது முதியவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிரதேசத்தில் சுமார் ஒருமாதத்துக்கு முதல் சிறுவன் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சந்தேக நபர் அவரது வீட்டுக்கு சிறுவனை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.